தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 3  மேஜைகள் போடப்படும் 500 ஓட்டுகள் விதம் எண்ணப்படும் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்       கன்னியாகுமரி மாவட்டத்தில்  3வது  நாளாக விடிய விடிய மழை 14 வீடுகள் சேதம்  பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு 

திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்

 
 


October 7, 2022 at 5:13 pm

சென்னை: திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை என்றும் அந்தப் புத்தக்கதை முழுமையாக மொழபெயர்க்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.   சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், " தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றவுடன் எனக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக ஒவ்வொரு திருக்குறளின் முழுமையான அர்த்தத்தை புரிந்து வாசித்து வருகிறேன். திருக்குறளின் மொழிபெயர்ப்பு நூல்கள் 12க்கும் மேற்பட்டவை என்னிடம் உள்ளன.   அவற்றை வைத்து நான் படித்து வருகிறேன். குறலில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு பெரிய அர்த்தங்கள் அமைந்துள்ளன. கோயம்புத்தூரில் திருக்குறள் மாநாட்டை முதல் முறையாக துவங்கி வைத்தேன். தற்போது இரண்டாவது முறையாக சென்னையில் துவங்கி வைத்துள்ளேன்.   திருக்குறள் நூலை பல்வேறு நபர்கள் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். இதன் மூலம் திருக்குறள் அர்த்தங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. திருக்குறள் நூல் பக்தியுடன் துவங்கி, ஐந்து புலன்களை எப்படி கட்டுப்படுத்துவது அதன் மூலம் எப்படி ஒருவன் தன் வாழ்நாளில் பிறந்தது முதல் இறப்பு வரை வாழ வேண்டும் என்பது குறித்துப் பேசுகிறது.     ஆனால், வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டுமே திருக்குறளை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் கூறப்பட்டு வருகிறது. திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை. ஆன்மிகம்தான் இந்தியாவின் ஆணிவேர் என்பதை யாரும் பேசவில்லை.   இந்த பிரச்சினை வெள்ளையர்கள் காலத்தில் துவங்கியது. குறிப்பாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு.போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழி பெயர்த்துள்ளார். அதிபகவன் என்றால் முதன்மை கடவுள் என நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஜி.யு. போப் இதற்கான அர்த்தத்தை புரிந்து இருந்தாலும் றிஸிமிவிகிலி ஞிஹிஜிசீ என எழுதியுள்ளார்.   திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர். ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து இந்த திருக்குறள் பேசுகிறது. இந்த புதக்கத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்ட நினைக்கின்றனர். இந்த புதக்கதை முழுமையாக புரிந்து வாசிக்கும் அனைவருக்கும் இது தெரியும்.   இந்தியா வளர்ந்து கொண்டு்ள்ளது. இந்தியா வரும், 2047ம் ஆண்டு இந்தியா உலக வல்லரசாக மாறும். வெறும் பொருளாதார அளவில் மட்டும் நாம் வளக்கூடாது. நாடு வளர வளர ஆன்மிகமும் வளர வேண்டும். திருக்குறளுக்கு அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். அதனை யாராலும் தடுக்க முடியாது, உண்மை ஒரு நாள் நிச்சயம் வெளி வந்தே தீர வேண்டும்.   திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட புதக்கங்களை நான் படித்தேன். ஆனால் திருக்குறளின் உண்மை நிலையை அந்த புதக்கங்கள் பேசவில்லை. திருக்குறள் புத்தக்கதை முழுமையாக மொழி பெயர்க்க வேண்டும்" என்று கூறினார்.    

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News