தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாக அமையட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து......புதிய அரசு அமைந்ததும்: பெண்களுக்கு ரூ.1 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்; ராகுல் காந்தி பிரசாரம்/     காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்தியாவை பின்னோக்கி கொண்டு செல்லும்” - ராஜ்நாத் சிங்     மக்களவை தேர்தல்: சிவசேனா 21, காங்கிரஸ் 17, என்சிபி 10… மராட்டியத்தில் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவு

கன்னியாகுமரியையும் மோடியையும் பிரிக்க முடியாதுஅண்ணாமலை பேச்சு
 


March 15, 2024 at 6:11 pm

நாகர்கோவில் மார்ச் 16   கன்னியாகுமரியையும் மோடியையும் பிரிக்க முடியாது என்று கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார் கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார் அவர் பேசியதாவது   அண்ணாமலை பேசுகையில், "பிரதமர் மோடி எனக்கு பிடித்தமான மண்ணுக்கு வந்துள்ளார். கன்னியாகுமரியையும் பிரதமர் மோடியையும் யாராலும் பிரித்து பார்க்கமுடியாது. 1991 டிசம்பர் 11-ம் தேதி இங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து முரளிமனோகர் ஜோஷியுடன் ஏக்தா யாத்திரை என்ற ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். இந்தியாவை துண்டாடிக்கொண்டிருந்த காலகட்டம் அது. இந்தியாவில் அமைந்துள்ள மாநிலங்களும் பிரிந்துகிடந்தன. 1992 ஜனவரி 26 அன்று காஷ்மீரில் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து யாத்துரையை முடித்தார் மோடி. தாயின் பாலை குடித்து வளர்ந்த நான் யாருக்கும் பயப்படமாட்டேன் என காஷ்மீரில் தேசியகொடியை ஏற்றினார். இந்த மண்ணின் மைந்தனாக நீங்கள் பிரதமர் மோடியை கொண்டாடிகொண்டிருக்கிறீர்கள். இன்று குமரி மாவட்டத்துக்கு மிகப்பெரிய உறுதிமொழியோடு வந்திருக்கிறார். 3 வது முறையாக மோடி பிரதமராக வரப்போகிறார். இதுபோன்ற அரசியல் தலைவர் கண்னூக்கு எட்டிய தூரம்வரை இல்லை. இந்தியா கூட்டணி வாரிசு அரசியல். மக்களே என் குடும்பம். மோடியின் தம்பிகளாக இங்கு வந்துள்ளீர்கள். 400 எம்.பி-க்கள் என்பது வெறும் வார்த்தை கிடையாது. மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரும்போது 400 எம்.பி-க்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல, மக்களின் உணர்வாக இருக்கும். அதில் 370-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பா.ஜ.க-வை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இதே குமரிக்கு இன்னொரு மனிதரும் வந்தார். 1882-ல் டிசம்பர் 24-ல் நரேந்திர தத்தா என்கிற மனிதன் கடலில் நீந்தி மூன்று நாட்கள் பாறையில் அமர்ந்து நாடு, மக்கள் குறித்து சிந்தித்து விவேகானந்தராக மாறினார். இந்தியாவை அசைக்கமுடியாத சக்தியாக மாற்ற மோடி வந்துள்ளார். மோடி விஸ்வகுருவாக மாறிக்கொண்டிருக்கிறார். விவேகானந்தர் சிக்காகோவுக்கு போய்விட்டு வந்து ராமகிருஷ்ண மிஷனை தொடங்கினார். டீ விற்ற சாதாரண ஏழை மோடி. அவரது அம்மா 5 வீடுகளில் பாத்திரம் தேய்த்து தன்னை வருத்திக்கொண்டு வாழ்ந்த தாயின் மகன்தான் மோடி. மோடி ராஜ்கோட்டில் உள்ள ராமகிருஷ்ண மிஷனுக்கு ஞானி ஆக வேண்டும் என சென்றார். அங்கிருந்த அஸ்வஸ்தானந்தா சொன்னார் ஞானி ஆகி இருக்க நீ பிறக்கவில்லை. இந்த நாட்டுக்காக பிறந்துள்ளாய் என 2 முறை திருப்பி அனுப்பப்பட்டார். இப்போது 142 கோடி மக்களின் விஸ்வ குருவாக மோடி அமர்ந்துள்ளார்" என்றார்.

 


மக்கள் கருத்து

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுத, எழுதும் இடத்தில் கிளிக் செய்து ctrl+g ஐ பிரஸ் செய்யவும்

பெயர்:

கருத்து:


    No Comments Added.











Latest News